திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு! தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

 

திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு! தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

இந்து மதத்தை சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டுள்ள இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற விளம்பரத்தினை கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது. இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக சில இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து டிவிட்டரில் Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது. தனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்கிற பிரசாரத்தின் மூலம் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்தன. இது போன்ற எதிர்ப்புகள் காரணமாக , அந்த விளம்பரத்தை யுடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி
ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள தர்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், “மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக. மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இருப்பினும் இது ஒரு அதிமுக தொண்டனாக என் கருத்தே தவிர அதிகாரப்பூர்வமானதல்ல. நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை செயலருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.

திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு! தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு அமைச்சர் பாண்டியராஜன் ஆதரவு

தனிஷ்க் நிறுவன விளம்பரம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அந்த விளம்பரம் எனக்கு பிடித்துள்ளது. பலரின் எதிர்வினை காரணமாக அந்நிறுவனம் விளம்பரத்தை நீக்கியுள்ளது. தமிழக அரசு அந்நிறுவனத்தின் 26% பங்குகளை வைத்திருக்கிறது. திருமணத்திற்காக மதம் மாறுவது தான் தவறு. அவரவர் அவரவர் மதத்தில் இருந்து கொண்டு திருமணம் செய்தல் சிறப்பானது.

தமிழ அரசு சார்பில் ஏப்ரல், மே ஜூன் மாதம் 31 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைப் ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக அரசு என்ன செய்து வருகிறது என கூட பார்க்காமல் குறை கூறி வருகிறார். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜிஎஸ்டி வரி தமிழ் நாட்டில் இருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் விரைவில் நலம் பெற வேண்டும்.” எனக் கூறினார்.