நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார்: அமைச்சர் பாண்டியராஜன்

 

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார்: அமைச்சர் பாண்டியராஜன்

நீட் தேர்விற்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கையில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் மினி ஸ்டேடியம், குளம் தூர் வருவது போன்றவற்றை ஆய்வு செய்து பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “ஆவடி தொழில் நகரமட்டுமல்லாமல் ஆன்மிக நகரம். அதேபோல் ஆவடி தொகுதியில் 75 குளங்கள்,15 ஏரிகள் என அதிக நீர்நிலைகளைக் கொண்டது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை. நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார், இதில் தவறேதுமில்லை. இதில் எந்த தவருமில்லை. அவர் நல்ல எண்ணத்தில்தான் கூறியுள்ளார் என நான் நம்புகிறேன்.

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார்: அமைச்சர் பாண்டியராஜன்

நீட்டில் திமுக தான் அரசியலிற்காக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முதல் விதையை போட்டது திமுக, அடுத்த விதையை போட்டது காங்கிரஸ்” என தெரிவித்தார்.