விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

 

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்  : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்  : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

சென்னையை அடுத்த திருநின்றவூரில் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பாண்டியராஜன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிமுகவை பொறுத்தவரைக்கும் விஜய் சேதுபதி நடிப்பு சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை .ஆனால் அவர் புகழும் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி நாங்கள் ஒரு கோரிக்கை வைத்தோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதோ ஒரு நபர் மிகவும் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயலில் ஈடுபட்ட நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதிபட தெரிவித்தார்.

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்  : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

முன்னதாக நடிகை விஐய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் கணக்கில் ரித்திக் என்ற பெயரில் ஆபாச மிரட்டல் வந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, பாடகி சின்மயி, நடிகை குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.