’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

 

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

மின்கட்டணம் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதற்கு ரீடிங் குளறுபடிகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி தனது பதிலை அறிக்கையாகவே அளித்திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்:

கொரோனா தொற்று பரவாமல் இருக்கத்தான், ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் வீடுதோறும் சென்று மின் கணக்கீடு செய்யவில்லை.  அதற்கு பதில், தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள், தங்களுடைய ஜனவரி-பிப்ரவரி மாத கணக்கீட்டு  பட்டியலின்படி, மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டது.

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

தற்போது மின் கணக்கீடு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த மின் அளவீடு 4 மாதங்களுக்கு உள்ள மின் பயன்பாடு என்பதால், நான்கு மாத காலத்திற்கான மின் நுகர்வு, இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், ஜெயலலிதா அவர்கள் 2016-ம் ஆண்டு முதல் கொண்டு வந்த 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச்-ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது. மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத்தொகை சரி செய்யப்படும்.

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

மேற்கண்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கணக்கீட்டு முறை தவறு என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், மேற்குறிப்பிட்ட கணக்கீட்டு முறை சரியானது என்பதனை மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், மேற்கண்ட கணக்கீட்டு முறையினால்தான், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான கணக்கீட்டிலும், தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.  இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும், அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நேர்மைத் தன்மையைக் காட்டுகிறது எனவும் மாண்புமிகு உயர்நீதி மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கீடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஒவ்வொரு நுகர்வோரும் தனித்தனியே அவர்களுடைய கணக்கீட்டு முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் காணும் வகையில் தனது இணயதளத்தில் வெளியிட்டுள்ளது.  கணக்கீட்டில் சந்தேகம் ஏதும் இருக்கும் பட்சத்தில், நுகர்வோர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

மாண்புமிகு உயர்நீதி மன்றம்  தெள்ளத்தெளிவாக தனது தீர்ப்பைக் கூறிய பிறகும், மின்சாரக் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரம் இவ்வாறு மிகத் தெளிவாக இணையதளத்தில் வெளியிட்ட பின்னரும், எதிர்க்கட்சித்தலைவர் திரும்பத்திரும்ப ’மின்சார ரீடிங் எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனர்’ எனவும் ’தவறான அடிப்படையில் கணக்கீடு’ எனவும், ’மின்சார வாரியத்திற்கு இலாபம்’ எனவும் உண்மைக்கு மாறான செய்தியை  கூறிக்கொண்டிருப்பது, மக்களை குழப்ப முயல்வதுதான்.  ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது.  இது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர், தொலைக்காட்சி பேட்டியில், அதிக மின் கட்டணம் சம்பந்தமாக சில ஆவணங்களை காண்பித்தார்.  அவற்றில் ஒன்றில் மட்டுமே, நுகர்வோரின் விவரம் தெளிவாக தெரிந்ததனால்,  அதை மின்சார வாரியம் ஆய்வு செய்தது.  அந்த ஆய்வில், அந்த நுகர்வோர், வீட்டு மின் நுகர்வோர் இல்லை எனவும், தொழில் மின் நுகர்வோர் எனவும் தெரிய வந்தது.  தொழில் மின் நுகர்வோர் அட்டையை காண்பிப்பது, மக்களை திசை திருப்பும் காரியமாகும்.  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

மின் கணக்கீட்டு வீதப்பட்டி என்பதை  மாற்றி மின் கட்டணத்தை ஏற்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இலாபம் பார்க்க வேண்டும் என்று மின் கணக்கீடு செய்வதுமில்லை; அதேபோல இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் விநியோகிப்பதும்  இல்லை. எந்த ஒரு அரசும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான கணக்கீட்டின் மூலம் இலாபம் பார்க்க வேண்டும் என்று செயல்படுவதில்லை.

இந்த அடிப்படையில்தான் ஜெயலலிதா அவர்கள், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அளித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான தற்போதைய மின் கட்டணம், அதன் உற்பத்தி செலவை விட மிக, மிக குறைந்த அளவிலேயே உள்ளது.  மேலும், அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ள நிலையில், கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இலாபம் பார்க்கின்றது என கூறுவதிலும், எள்ளளவும் உண்மை இல்லை.

முந்தைய திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தொலைநோக்குடன் தனது திடமான செயலாற்றலால், மின்மிகை மாநிலமாக மாற்றி ஒளிரச்செய்த மாண்புமிகு அம்மா அவர்கள், 2016ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும்

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார்கள். இதன்மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர்.    இந்தச் சலுகை மக்களுக்கு வழங்கப்பட்ட பெரிய சலுகையாக  எதிர்க்கட்சித் தலைவருக்கு  தெரியவில்லையா? இந்தச்சலுகையினால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட, வருடத்திற்கு சராசரியாக 2,878 கோடி ரூபாய்  கடந்த 4 வருடங்களாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.  இதன்பொருட்டு இந்த 4 வருடங்களில் 11,512 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.  இந்த சலுகை இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் இல்லாத சலுகையாகும். பேரிடர் காலத்தில் மட்டுமல்லாமல், அனைத்து காலங்களிலும், தொடர்ந்து 4 ஆண்டுகளைக் கடந்து, பொதுமக்களின் நன்மை கருதி இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  இது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்த விஷயம். மேலும்,

100 யூனிட்டிற்குள் மின் நுகர்வு செய்யும் சுமார் 70 லட்சம் ஏழை, எளிய சாமானிய குடும்பங்களுக்கு விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது.  இந்த சலுகை திமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டதா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கொடுக்கப்படுகிறதா என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும்.

ஆனால், இதனை பாராட்ட மனமில்லாத எதிர்கட்சித் தலைவர், கொரோனா காலத்திற்கு மட்டுமே வெறும் 80 யூனிட்டுகள் சலுகையாக வழங்கும் கேரளத்தைப் போன்றும், மின் கட்டணத்தில் 5-7 சதவீதம் மட்டுமே குறைத்து சலுகை வழங்கும் மகாராஷ்டிராவைப் போன்றும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும் என்கிறார்.

’ரீடிங் குளறுபடி என்பது மக்களைக் குழப்பவே’ மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி பதில்

தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும், 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும்.  ஆனால், இதேபோல் 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் கேரளாவில் 1,165 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,776 ரூபாயும் கட்டணமாக செலுத்துகின்றனர்.  எனவே, தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டை விட மிக அதிக வீட்டு மின்கட்டண விகிதப்பட்டி உள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? அவர்களைப் போல் தமிழ்நாட்டிலும் மிக அதிக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் விரும்புகிறாரா? பொதுமக்களுக்கு தமிழ்நாட்டில் தமிழக அரசு தொடர்ந்து வாரி வழங்கும் மின் சலுகைகளை மறைத்து, பிற மாநிலங்களில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான சலுகைகளைப் பற்றிக் கூறுவது ’கனி இருப்ப காய் கவர்ந்தது’ போன்றதாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் அவர்களோ, நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட மின்கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்கிறார்.  ஆனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி அவர்களோ, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்கிறார்.  இப்படி முரண்பட்ட கருத்துகள், திமுக செய்யும் முரண்பாடான அரசியலை தெளிவாகக் காட்டுகிறது.