“கண்ணு மாறாமல் இருந்தால், காட்சிகள் மாறாமல் இருக்கும்” கூட்டணி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து

 

“கண்ணு மாறாமல் இருந்தால், காட்சிகள் மாறாமல் இருக்கும்” கூட்டணி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து

கண்ணு மாறாமல் இருந்தால், காட்சிகள் மாறாமல் இருக்கும் என்றும், கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் நடந்த சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும்

“கண்ணு மாறாமல் இருந்தால், காட்சிகள் மாறாமல் இருக்கும்” கூட்டணி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கலந்துகொண்டு 111 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருப்பது, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூட்டுவதற்கே என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சிகளின்

நிலைப்பாடு குறித்து பேசிய அவர், கண்ணு மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது என்றும், கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும் என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணி செல்வோம் என்ற

“கண்ணு மாறாமல் இருந்தால், காட்சிகள் மாறாமல் இருக்கும்” கூட்டணி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து

பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கல்யாண வீட்டிற்கு சாப்பிட வந்தவர்கள், தங்கள் வீட்டு அடுப்பை இடிப்பதில்லை என்றும், தமிழகத்தில் பாஜகவை வளர்க்கவே இவ்வாறு அவர் பேசி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, வலது பக்கத்தில் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று கிண்டல் செய்தார்.