சசிகலா வந்தால் அதிமுகவில் குழப்பம் ஏற்படுமா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

 

சசிகலா வந்தால் அதிமுகவில் குழப்பம் ஏற்படுமா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சசிகலா வந்தாலும் அதிமுகவுக்குள் சிக்கல் வராது என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வந்தால் அதிமுகவில் குழப்பம் ஏற்படுமா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுக முதல்வர் வேட்பாளருக்கு பிறகு சென்னையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ அதிமுகவில் குழப்பம் என்பதே இல்லை. பேசி தீர்த்துக்கொள்ள கூடிய சில கருத்துகள் இருக்குமே ஒழிய குழப்பம் ஏதுமில்லை. அம்மா இல்லாத காலத்தில் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறோம். இயற்கை பேரிடர் காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.

சசிகலா வந்தால் அதிமுகவில் குழப்பம் ஏற்படுமா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முதல்வர் வேட்பாளர் குழப்பத்தால் நாங்கள் சரியாக பணியாற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் அதிமுக அரசில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். சசிகலா வந்த பிறகு அதிமுகவில் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது” என்றார்.