தமிழிசை உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது- அமைச்சர் ஓ .எஸ். மணியன்

 

தமிழிசை உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது- அமைச்சர் ஓ .எஸ். மணியன்

புதுச்சேரி அரசியல் களத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அங்கு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமைச்சர்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தது முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது மட்டுமில்லாமல், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில் கிரண்பேடியை செய்த குடியரசுத் தலைவர், தமிழிசை சௌந்தரராஜனை புதுச்சேரி ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை, புதுச்சேரியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.

தமிழிசை உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது- அமைச்சர் ஓ .எஸ். மணியன்

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை செய்தபின் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். அவரது தந்தை காங்கிரஸ்காரர். ஆனால் இப்போது அவர் பாஜக அரசால் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறோம். விலையை குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்” எனக் கூறினார்.