கொரோனா சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நிலோபர் கபிலிடம் நலம் விசாரித்தார் முதல்வர்!

 

கொரோனா சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நிலோபர் கபிலிடம் நலம் விசாரித்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சாதாரண மக்கள் முதல்வர் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ், பல அமைச்சர்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நிலோபர் கபிலிடம் நலம் விசாரித்தார் முதல்வர்!

இந்த நிலையில் இன்று அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா உறுதியானது. மேலும் அமைச்சரின் மகன், மருமகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் எல்லாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் நிலோபர் கபிலிடம் முதல்வர் நலம் விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணமடைந்து இயல்புநிலை திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.