தீரன் சின்னமலை நினைவிடத்தில், அமைச்சர் முத்துச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

 

தீரன் சின்னமலை நினைவிடத்தில், அமைச்சர் முத்துச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஈரோடு

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, ஈரோடு ஓடாநிலையில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் முத்துச்சாமி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில், அமைச்சர் முத்துச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

தொடர்ந்து, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, எம்எல்ஏ ஜெயகுமார், முன்னாள் எம்.பிக்கள் செல்லகுமார, சின்னையன், சத்தியபாமா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், பாஜக சார்பில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, மதிமுக சார்பில் கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில், அமைச்சர் முத்துச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.பி.ரவி, மக்கள் ராஜன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஏ.கே.பி. சின்ராஜ், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தேமுதிக சார்பில் முருகன், ஆனந்த், அமமுக டி.தங்கராஜ், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், கொங்கு வேளாளர் கவுண்டர் மக்கள் பேரவை தலைவர் கருப்பசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில், அமைச்சர் முத்துச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

அதேபோல், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, அவர்கள் தீரன் சின்னமலை வாழ்க்கை குறிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டனர்.