“நான் சொன்னா போட்டு தள்ளிட்டு வந்திருவானுங்க” – செந்தில் பாலாஜியை மிரட்டும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடியோ!

 

“நான் சொன்னா போட்டு தள்ளிட்டு வந்திருவானுங்க” – செந்தில் பாலாஜியை மிரட்டும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடியோ!

கரூர் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், செந்தில் பாலாஜிக்கும் மோதல் இருந்துகொண்டே வந்தது. இப்போதும் தொடர்கிறது. கரூரில் வெற்றிபெறுவது தங்கள் கௌரவ பிரச்சனை என்கிற ரீதியில் இருவரும் போட்டி போடுவதால் களேபரங்கள் நடக்கின்றன. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போதே இருந்து வந்த மோதல் தற்போது எதிர்க்கட்சி என்பதால் இன்னும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வேட்பாளராக வேறு இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்புச் செய்திகளில் கரூர் இடம்பிடித்துவிடுகிறது.

“நான் சொன்னா போட்டு தள்ளிட்டு வந்திருவானுங்க” – செந்தில் பாலாஜியை மிரட்டும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடியோ!

இரு தினங்களுக்கு முன் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிக்க சென்றபோது, அதிமுக-திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் அமைச்சர் மக்களிடம் வாக்கு சேகரித்து சென்றதாக திமுக புகார் அளித்ததால் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் கரூரே ரத்தக்களரியானது. இச்சூழலில் தற்போது செந்தில் பாலாஜி பதிவுசெய்துள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ட்வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டல் விடுக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், “இவனுங்க பூச்சாண்டிலாம் அப்புறம் பாத்துக்குறேன் நானு. நைட் மட்டும் திருப்பிவிட்டிருந்தேன்னா போட்டு தள்ளிருப்பானுங்க” என்று பேசுகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள செந்தில் பாலாஜி, “தேர்தல் தோல்வி பயத்தில் – பதற்றத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் கரூர் அதிமுக வேட்பாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று கரூர் வடக்கு நகரச் செயலாளர் லாட்டரி பாண்டியன், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் திமுகவினரை கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.