திமுகவினர் காட்டுமிராண்டிகள், ரவுடிகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

 

திமுகவினர் காட்டுமிராண்டிகள், ரவுடிகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மற்றும் அதிமுக அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதே சமயத்தில் இரு கட்சியினரிடையே மோதல்களும் வெடித்துள்ளன. கரூரில் நேற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அமைச்சர் வீடுதிரும்பும் போது திமுகவினர் அவரது காரை வழிமறித்தனர். இதனால் அதிமுக – திமுக தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

திமுகவினர் காட்டுமிராண்டிகள், ரவுடிகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

இதில் அதிமுகவின் ஐ.டி டீம் நிர்வாகிகள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ரவுடிகளும் காட்டுமிராண்டிகளும் அதிமுக தொண்டர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்று கூறினார்.

திமுகவினர் காட்டுமிராண்டிகள், ரவுடிகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

மேலும், தேர்தலின் போதே திமுகவின் அராஜகம் தொடங்கிவிட்டது. பரப்புரையிலேயே மணற்கொள்ளை பற்றி செந்தில் பாலாஜி பேசினார். திமுக மட்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நாடே தாங்காது என ஆவேசமாக பேசினார்.