மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா : சிக்கலில் ஸ்டாலின்

 

மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா : சிக்கலில் ஸ்டாலின்

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா : சிக்கலில் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சர்களாக பதவி ஏற்றபின் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா : சிக்கலில் ஸ்டாலின்

இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவேபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.ஸ்டாலின் தலைமை அரசு பதவிக்கு வந்து சில நாட்கள் ஆகும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சூழலில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா அடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலையை உண்டாக்கியுள்ளது.உடல்நலக்குறைவால் அமைச்சர்கள் மதிவேந்தன், எஸ்.எஸ். சிவசங்கர் இருவரும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.