“அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் “- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

 

“அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் “- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை

அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வர உள்ளதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற தேர்தலை போல அல்லாமல், தற்போது 6 மாதத்திற்கு முன்பே கூட்டணி உறுதியானதால், களப்பணி செய்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

“அதிமுக கூட்டணிக்கு மேலும் 2 கட்சிகள் வரும் “- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மேலும், தற்போதய கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், மேலும் 2 கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அமித்ஷா வருகையின் போது, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை கிடைத்த பிறகு, ஆளுநர் முடிவெடுப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தந்தைக்கு திருநீற்றை அவமதித்து கெட்டப்பெயர் ஏற்பட்டதால், அதனை சமாளிக்க உதயநிதி ஸ்டாலின் ஆதீனத்தை சந்தித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,