“மத்திய அரசு ஊழியர்களின் ஓட்டை, தமிழக ஓட்டாக மாற்ற திட்டம்” – மாஃபா பாண்டியராஜன்

 

“மத்திய அரசு ஊழியர்களின் ஓட்டை, தமிழக ஓட்டாக மாற்ற திட்டம்” – மாஃபா பாண்டியராஜன்

சென்னை

3 வருட சுழற்சிமுறையில் தமிழகத்தில் வந்து பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் ஒட்டுகளை, தமிழக ஒட்டாக மாற்றும் திட்டம் உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சி காமராஜர் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகள் மற்றும் பாதாளசாக்கடையை திறந்துவைத்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆவடியில் மட்டும் மத்திய அரசின் 8 நிறுவனங்கள் உள்ளதாகவும், இதில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கினால் 10 ஆயிரம் வாக்குகள் மேலும் கூடும் என்றும் தெரிவித்தார்.

“மத்திய அரசு ஊழியர்களின் ஓட்டை, தமிழக ஓட்டாக மாற்ற திட்டம்” – மாஃபா பாண்டியராஜன்

மேலும், இடம்மாறி சென்றவர்கள், இறந்து போனவர்கள் என குறித்து கணக்கு எடுக்கும் பணியிலும், சேர்க்கும் பணியிலும் பூத் முகவர்கள் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் செயல்படுத்த போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் அடிப்பதற்கு, இதனை முக்கியமான கருவியாக முதல்வர், துணை முதல்வர் நினைப்பதாக தெரிவித்தார்.