ஜோலார்பேட்டையில் கிளை நூலக கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.சி.வீரமணி

 

ஜோலார்பேட்டையில் கிளை நூலக கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 8-வது வார்டு அண்ணா தெருவில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கிளை நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ஜோலார்பேட்டையில் கிளை நூலக கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.சி.வீரமணி

இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.