“வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலை விரிவாக்க பணிகள் 10 நாட்களில் தொடங்கும்” – கே.சி.வீரமணி

 

“வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலை விரிவாக்க பணிகள் 10 நாட்களில் தொடங்கும்” – கே.சி.வீரமணி

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் 10 நாட்களுக்குள் தொடங்கும் என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் அரசு கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சாலை விரிவாக்க பணிக்காக மத்திய அரசு ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்காக கடந்த மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

“வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலை விரிவாக்க பணிகள் 10 நாட்களில் தொடங்கும்” – கே.சி.வீரமணி

நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 கோடியே 43 லட்சம் ரூபாய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் வீரமணி, தமிழக முதலமைச்சரும், மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார். மேலும், ஒரே ஆண்டில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்துவைத்த தமிழக முதல்வர் அடுத்த அறிவிப்பாக, திருப்பத்தூரில் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை அமையும் என்ற அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.