பொதுப் போக்குவரத்து எப்போது?: அமைச்சர் காமராஜ் விளக்கம்

 

பொதுப் போக்குவரத்து எப்போது?: அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஒரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பினும் ரயில் சேவையும், பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் பேருந்து சேவையும் இன்னும் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக, பொதுப்போக்குவரத்து சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

பொதுப் போக்குவரத்து எப்போது?: அமைச்சர் காமராஜ் விளக்கம்

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் காமராஜ், பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் வரை அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.