மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும்: அமைச்சர் காமராஜ் விமர்சனம்!

 

மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும்: அமைச்சர் காமராஜ் விமர்சனம்!

ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் கனவு தான் என அமைச்சர் காமராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வழக்கமாக தேர்தலுக்கு முன்னர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்படும் மோதல்கள் தற்போது நீடிக்கிறது. அதிமுக அமைச்சர்களோ, அடுத்த ஆட்சியிலும் அதிமுக தான் அரியணை ஏறும் என கூறி வருகின்றனர். அண்மையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘6 மாதத்தில் ஆட்டம் முடியும்.. விடியல் பிறக்கும்’ என கூறினார்.

மு.க ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும்: அமைச்சர் காமராஜ் விமர்சனம்!

இதனை விமர்சித்து அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் காமராஜும் ஸ்டாலினை விமர்சித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 6 மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறுவது எல்லாம் பகல் கனவாகவே முடியும் என்றும் அதிமுக தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாயிக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் அரசு அனுமதிக்காது என கூறிய அமைச்சர், வேளாண் மசோதா தாக்கல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.