‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

 

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வையுங்கள் என்றும் கட்சிக்கொடியிலிருந்து அண்ணா படத்தை தூக்குங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் கடுப்பான அமைச்சர் ஜெயக்குமார், எஸ்வி சேகரின் கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு, எஸ்.வி சேகர் நன்றி மறந்தவர் என்றும் பதிலடி கொடுத்திருந்தனர்.

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

இந்த நிலையில் எஸ்.வி சேகர் கூறியது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் பேட்டியளித்த அமைச்சர், எஸ்.வி சேகருக்கு வேலை இல்லை. அதிமுகவை பற்றியும் முதல்வரை பற்றியும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார் என்றும் அவரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.