தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?.. அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

 

தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?.. அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் பணி நடைபெற்றது. அதில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு மக்களுக்கு அரசி, மளிகைப்பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது 8 ஆம் தேதிக்கு பிறகு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதன் படி, முதல்வர் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல முடிவு செய்வார் என்று கூறினார்.

தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?.. அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு ஒரு முறை அனுமதி வழங்கினால் போதும் என்று முதல்வர் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் ஆனால் பலர் தினமும் அனுமதி வாங்க வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும் அதனை தான் முதல்வரிடம் கேட்டு தெளிவுப்படுத்தியதாகவும் கூறினார். திரையரங்குள், வழிபாட்டு தலங்கள், நீச்சல்குளம், மால்கள் திறப்பது குறித்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டினை வெளியிட்டால் தான் தமிழக அரசு முடிவு செய்யும். எந்த தொழிலும் நசுக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்தவதிலும் கவனம் செலுத்தி முறையான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்தார்.