“ஆட்சியில் அமர அதிமுகவை தவிர யாருக்கும் தகுதி இல்லை” : அமைச்சர் கடம்பூர் ராஜு
Oct 17, 2020, 12:05 IST1602916526000
தமிழகத்தில் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க தகுதி இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்வருமான பழனிசாமி சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியையேற்றி சிறப்பித்தார். அதேபோல் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ககொடியை ஏற்றினார்.
இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க தகுதி இல்லை. திமுக பற்றி கவலைப்படத் தேவையில்லை; அதிமுகவை வெல்ல எந்த சக்தியும் இல்லை என சபதம் ஏற்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்