“புதிய கூட்டணி வந்தாலும் அதிமுகவுக்கு பயமில்லை” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

“புதிய கூட்டணி வந்தாலும் அதிமுகவுக்கு பயமில்லை” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘தேர்தல் நேரத்தில் யார், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். அதற்கு தடை போட யாராலும் முடியாது. ரஜினி இதுவரை கட்சியை பதிவு செய்யவில்லை. அண்மையில் சின்னம் மற்றும் பெயர் குறித்த தகவல் கூட அவர் உறுதிப்படுத்தினால் தான் தெரிய வரும்’ எனக் கூறினார்.

“புதிய கூட்டணி வந்தாலும் அதிமுகவுக்கு பயமில்லை” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து, ‘தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தற்போது நீடிக்கும் கூட்டணிகள் மாறலாம். புதிய கூட்டணிகள் உருவாகலாம். அதை பற்றி எங்களுக்கு பயம் இல்லை. அதிமுக எப்போதுமே மக்களுடன் தான் கூட்டணி அமைக்கும். இதை ஜெயலலிதா நிரூபித்துக் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். கூட்டணி இல்லாமல் தனித்தே நின்று அதிமுக ஜெயிக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுடன் கைகோர்த்து வெற்றி பெறுவோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘திமுகவின் ஊழலை ஆரம்பிக்க தான் அதிமுக தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களே அவர்களை ஓரம் கட்டிவிட்டார்கள். ஊழலை தடுக்க அதிமுகவே போதும்’ என்றும் கூறினார்.