சசிகலாவை பனங்காட்டு நரி என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

 

சசிகலாவை பனங்காட்டு நரி என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

அதிமுகவிற்கும் சசிகலாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர்கள் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “அதிமுக யாருக்கும் அஞ்சாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. தேவையில்லாதவர்களை பற்றி, தேவையில்லாமல் பேசு வேண்டிய தேவையில்லை என்பதால் எந்த அமைச்சரும் சசிகலாவை பற்றி எந்த அமைச்சர்களும் பேசுவதில்லை. இந்தி திணிப்பை எதிர்ப்பது அண்ணா தலைமையில் இருந்த திமுக தான். தற்போதுள்ள திமுக கிடையாது.

சசிகலாவை பனங்காட்டு நரி என விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ!

இந்தி போராட்டத்தின்போது ரயில்வராத தண்டவாளத்தில் தலைவைத்து நாடகம் நடத்தியவர் கருணாநிதி. கேந்திரிய வித்தியாலா பள்ளிகளில் தங்களுக்கு கிடைக்கும் இடங்களை திமுக எம்பிக்கள் பேரம் பேசி நல்ல விலைக்கு விற்கின்றனர். இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு கைவந்த கலை. திமுக வெற்றிடத்தையும், அதிமுக வெற்றியையும் நோக்கி பயணிக்கிறது. எந்த காலத்திலும் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றப்போவதில்லை.அதிமுகவிற்கும் சசிகலாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர்கள் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்துவிட்டார்கள்” எனக் கூறினார்.