‘இருவர் தலைமையில்’ தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் : அமைச்சர் பேட்டி!

 

‘இருவர் தலைமையில்’ தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் : அமைச்சர் பேட்டி!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் முதல்வர் பழனிசாமி எதிர்க்கட்சியின் விமர்சனங்கள், சசிகலா வருகை, உட்கட்சி பூசல், சசிகலா பக்கம் திரும்பும் தொண்டர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு பயிர்க்கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் என அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார்.

‘இருவர் தலைமையில்’ தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் : அமைச்சர் பேட்டி!

கண்டும் காணாமல் இருந்தாலும் சசிகலாவின் வருகை இரட்டை தலைமை மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். என்ன ஆனாலும் சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவை மீட்டே தீருவோம் என டிடிவியும் சசிகலாவுன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் தான் சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். அதிமுக பாசிட்டிவாக வாக்கு கேட்பதாக கூறிய அவர், அதிமுகவை பற்றி பேசாமல் திமுக தேர்தலை சந்திக்க முடியாது என்றும் விமர்சித்தார்.