சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் இருக்குமா? – அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

 

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் இருக்குமா? – அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலவாதிகள் இதுவரை குற்றம் குறை சொல்லவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் கூறலாம் அது வரவேற்க கூடியது தான். சட்டமன்றம் கூடியது போது சட்டமன்றத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பிரச்சினை என்றதும் பின்வாங்க கூடாது என்பதற்கு தான் சட்டமன்றம் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்ற கருத்தினை முதல்வர் கூறினார். அந்த நேரத்திலும் சட்டமன்றத்தினை ஒத்திவைத்து விட்டு, நாம் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கூறியவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். சட்டமன்றம் ஒத்திவைப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே இனி நாங்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சுயநலத்துடன் கூறியவர்கள் திமுகவினர். ஆனால் தமிழக முதல்வர் தினமும் தலைமை செயலகம் சென்று மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் இருக்குமா? – அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சொல்கிறார் என்றார். சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றங்கள் எதுவும் இருக்குமா என்று கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, அதை பற்றி யோசிக்க நேரமில்லை, கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விக்கு இடமில்லை என்றும், அந்த சிந்தனையே ஆளும் பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசுக்கும், நிர்வாகிகள் யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.