தியேட்டர்கள் திறப்பு: 2 நாட்களில் நல்ல முடிவு வரும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

தியேட்டர்கள் திறப்பு: 2 நாட்களில் நல்ல முடிவு வரும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து அடுத்த இரு தினங்களில் திரையரங்கு உரிமையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கிளப்பில் முன்னாள் இந்தியன் வங்கி சேர்மனும் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான கோபாலகிருஷ்ணன் நினைவு அஞ்சலி மற்றும் புகைப்பட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நாளை முதல்வரை சந்தித்து பேசவுள்ளேன். மேலும் அடுத்த இரண்டு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். திரைத்துறைக்கு பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நிதி உதவியையும் அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல் கொடுத்த பிறகே புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறப்பு: 2 நாட்களில் நல்ல முடிவு வரும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சிரமங்கள் தெரியும் எனவே அவர்களுடன் ஆலோசித்த பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ஆன்லைன் டிக்கெட் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.