எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தவர்கள் விஷக்கிருமிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு

 

எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தவர்கள் விஷக்கிருமிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தவர்கள் விஷக்கிருமிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு

அதனைத்தொடர்ந்து நேற்று புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் மர்மநபர்கள் காவித்துணியை போர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.எம்ஜிஆர் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், காவித்துண்டு அணிவித்தவர்கள் விஷக்கிருமிகள் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் என்றும் காவித்துண்டு அணிவித்தது சமூக விரோதிகளின் செயல் என்றும் கூறினார். மேலும், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்களை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்றும் கூறினார்.