வாஷிங் மெஷின் வைக்க எலக்ட்ரீஷியனை கூப்பிடுங்க!! ஓவர் கான்ஃபிடன்ட்டில் கடம்பூர் ராஜூ

 

வாஷிங் மெஷின் வைக்க எலக்ட்ரீஷியனை கூப்பிடுங்க!! ஓவர் கான்ஃபிடன்ட்டில் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர் , “வருகின்ற சட்டமன்ற தேர்தல் மக்களின் வாழ்வை தீர்மானிக்க கூடிய தேர்தல். இது ஐந்து ஆண்டுகள் நம்மை ஆள இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல். உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானிக்க கூடிய தேர்தல். நல்லாட்சியை தரக்கூடிய ஆட்சி அமைய வேண்டும் இல்லையென்றால் மக்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்றார்.

வாஷிங் மெஷின் வைக்க எலக்ட்ரீஷியனை கூப்பிடுங்க!! ஓவர் கான்ஃபிடன்ட்டில் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு வீட்டில் 4 ஓட்டுகள் இருந்தால் அமைச்சருக்கு ஆக 2 ஓட்டு ,மற்றவருக்காக 2 ஓட்டு என்று பிரித்து போடாதீர்கள். அப்படி இருந்தால் நீங்கள் ஏமாந்து போய் விடுவீர்கள் .வாக்குகள் வீணாகிப் போய்விடும். தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதி அதிமுகவுக்கு மட்டும்தான் உள்ளது .அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் .திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்துக்கு மட்டும் தான் நல்லது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் மக்களுக்காக வாழ்ந்து விட்டு மறைந்தவர்கள். அதனாலதான் எம்ஜிஆர் தலைமையில் மூன்று முறையும் ,ஜெயலலிதா தலைமுறையில் நான்கு முறையும் ஆட்சி அமைந்தது .

வாஷிங் மெஷின் வைக்க எலக்ட்ரீஷியனை கூப்பிடுங்க!! ஓவர் கான்ஃபிடன்ட்டில் கடம்பூர் ராஜூ

எப்போதுமே தமிழகத்தில் திமுக -அதிமுக இடையேதான் போட்டி நடக்கும் . வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி என்றால் அது அதிமுக தான் . அதனால் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 138 இடங்களில் அதிமுக கண்டிப்பாக தனித்து வெற்றிபெறும். அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இன்றே வாஷிங்மெஷின் வைப்பதற்கு எலக்ட்ரீசியன் அழைத்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என்றார்.