திமுக உடன்பிறப்பை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

 

திமுக உடன்பிறப்பை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை, உக்கிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்துள்ளது. 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா சங்கிலியை உடைக்க முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர். மாஸ்க் போடாதவர்களிடம் போலீசார் அபராதமும் வசூலித்துவருகின்றனர்.

திமுக உடன்பிறப்பை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “காவல்துறையாகவே மாறி பொதுமக்களையும்,போலீஸையும் மாஸ்க் அணியச் சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு.. குறிப்பு: உடன்பிறப்பு மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில் திமுக தொண்டர் ஒருவர், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போலீசாரை மாஸ்க் போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நபரே மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது.