“உதயநிதி ஒரு தறுதலை என்று ஊருக்கே தெரியும்”: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

 

“உதயநிதி ஒரு தறுதலை என்று ஊருக்கே தெரியும்”: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“உதயநிதி ஒரு தறுதலை என்று ஊருக்கே தெரியும்”: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

இந்நிலையில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

“உதயநிதி ஒரு தறுதலை என்று ஊருக்கே தெரியும்”: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடந்தது . அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்.7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஊருக்கே தெரியும் உதயநிதி ஒரு தறுதலை என்று. உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. முதலில் அவர் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். தமிழ்நாடு அரசியல் தெரியாத டீச்சர் பிரசாந்த் கிஷோர் கூறுவதை அப்படியே வந்து பேசுகிறார்” என்று விமர்சித்தார்.

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் அதிமுக தரப்பில் இரண்டு தறுதலைகள் இணைந்து செயற்குழு கூட்டம் நடத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பாஜக பிரமுகராக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.