“நாங்கள் இணைந்திருந்து அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” : அமைச்சர் ஜெயக்குமார்
Sep 27, 2020, 10:43 IST1601183637000
அதிமுகவின் செயற்குழு கூட்டம் கூடுவது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்கள் இணைந்திருந்து அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம். முதல்வர் வேட்பாளர் பற்றி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி செயற்குழு நடக்கிறது .வேறு எந்த காரணமும் இல்லை” என்றார்.