“பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் ஜெயக்குமார்

 

“பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் ஜெயக்குமார்

சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவு படுத்தி பேசியதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக, சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதே போல பாஜகவுக்கு எதிராக விசிகவினரும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னை எழும் என்பதால் போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது.

“பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் ஜெயக்குமார்

இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு, முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார். அதே போல மதுராந்தகம் அருகே கே.டி.ராகவனும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மட்டும் அல்ல. சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்ட ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்றும் கூறினார்.

“பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- அமைச்சர் ஜெயக்குமார்

மேலும், திருமாவளவன் மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தெரிவித்துள்ளார்.