மிரட்டுவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

 

மிரட்டுவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், கட்சிகளுக்கிடையே தற்போது வழக்கம் போல கூட்டணி பிரச்னை நிலவி வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கும் அதே வேளையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் கட்சி மாறலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் களமும், ஒரு கட்சி மீது மற்றொரு கட்சி குற்றஞ்சாட்டுவதும் இப்போதே தொடங்கிவிட்டது.

மிரட்டுவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள்- அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “மிரட்டுவதில் திமுக தான் எக்ஸ்போர்ட். இணையத்தில் உறுப்பினர் சேர்க்கை என திமுக ஏமாற்றுகிறது. வாக்காளர் எண்ணிக்கையை கூட திமுகவினரே என்பர். பருவ நிலை மாறுபாடு காரணமாக மியான்மரில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.