பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

 

பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தேமுதிக, இப்போது அமமுகவில் ஐக்கியமாகியுள்ளது. 60 இடங்கள் ஒதுக்கப்பட்டதால், மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தேமுதிகவினர். வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் தெரிய வந்தது.

பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

இந்த சூழலில் தான், இன்று காலை சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். ஜெயலலிதாவுக்கு இருந்து பக்குவம் எடப்பாடிக்கு இல்லை. கூட்டணியில் சுமுகமாக இருக்க வேண்டுமென நாங்கள் மிக பொறுமையாக இருந்தோம். ஆனால், அதிமுக எங்களை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கணத்த இதயத்துடன் தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். நாங்கள் கூட்டணியை விட்டு விலகவில்லை. பொய் புகார் சொல்லி அதிமுக எங்களை வெளியேற்றிவிட்டது என பேசியிருந்தார்.

பிரேமலதாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

இந்த நிலையில் பிரேமலதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யாரையும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. மிகுந்த பக்குவத்துடன் அதிமுக உள்ளது என்று கூறினார். மேலும் சிஏஏ விவகாரத்தில் பாஜகவின் கொள்கை வேறு.. அதிமுகவின் கொள்கை வேறு என்று கூறிய அமைச்சர், 7 பேர் விடுதலையில் திமுக தான் நாடகம் ஆடி வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.