தேர்தல் நேரத்தில் கூட்டணி பிரச்சனை சரி ஆகிவிடும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

தேர்தல் நேரத்தில் கூட்டணி பிரச்சனை சரி ஆகிவிடும் : அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக உள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் தேர்தல் பரப்புரைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளிலும் கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை ஒட்டி மக்களுக்கு இனிப்பு வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தேர்தலில் தணித்து நின்று போட்டியிட வேண்டும் என்று தான் தொண்டர்கள் விரும்புவதாக கூறினார்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி பிரச்சனை சரி ஆகிவிடும் : அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட போகிறதா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி பிரச்னை எல்லாம் தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும் என்றும் தனித்து போட்டியிடுவதாக பிரேமலதா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். மேலும், தேர்தல் கூட்டணியின் போது அதிமுகவை விட்டு யாரும் போக மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.