தைரியம் இருந்தா என் தொகுதி வந்து என்ன எதிர்த்து போட்டியிடுயா! ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

 

தைரியம் இருந்தா என் தொகுதி வந்து என்ன எதிர்த்து போட்டியிடுயா! ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், க.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஒவ்வொரு இந்தியனும் பெருமை பட கூடிய வகையில் சுதந்திரத்திற்காக போராட்டம் செய்தவர் நேதாஜி. ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், இனிமேல் காங்கிரஸ்க்கு தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் எதிர்காலமும் இருக்காது. தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரசும் நிராகரிக்கப்பட்ட கட்சிகள். வெவ்வேறு பெயரில் பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் புறக்கணிப்பட்ட கட்சி. மீனவர்களைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பச்சை துரோகம் செய்யதவர்கள் திமுக

தைரியம் இருந்தா என் தொகுதி வந்து என்ன எதிர்த்து போட்டியிடுயா! ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் போட்டியிடட்டும். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெம்பும், தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும். திமுக கட்சியின் சொத்துகள் திமுக குடும்பத்தினருக்கே சேருகிறது. 5 முறை ராயபுரத்தில் வெற்றி பெற்ற நிலையில் 6-வது முறையாக மக்கள் தன்னையே தேர்வு செய்வர்” எனக் கூறினார்.