திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான் – அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான் – அமைச்சர் ஜெயக்குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம் குமாருக்கும் இடையே நிலத்தகராரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியை பயன்படுத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூரில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தி கைதான எம்.எல்.ஏ இதயவர்மனிடம் செங்கல்பட்டில் உள்ள தனியார் மகாலில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். எம்.எ.ல்.ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான் – அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது. துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது.திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.