பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிஆர்ஓ கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளரா? – அமைச்சர் ஜெயக்குமார்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிஆர்ஓ கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளரா? – அமைச்சர் ஜெயக்குமார்

மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு வரும் என்பதால் தான் அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்யும். நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக அகில இந்திய மருத்துவ தேர்வு மையத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிஆர்ஓ கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளரா? – அமைச்சர் ஜெயக்குமார்

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிஆர்ஓ, அவரை நான் பிக்பாஸ் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன். கடந்த ஆறு மாதங்களாக எங்கோ சென்று ஒளிந்து கொண்டிருந்த அவர், இப்போது வந்து முதல்வர் வேட்பாளராகிறார், அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை. ராஜபக்சே இனத் துரோகி, விஜய் சேதுபதி முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை, தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு வரும் என்பதால்தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டு சட்டமியற்றி கொண்டுவரவேண்டும்” எனக் கூறினார்.