ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார்

 

ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார்

சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பட்டி தொட்டி எல்லாம் தமிழ் பரவ வேண்டும் என்பதற்காக உன்னதமான பணியைச் செய்தவர் சி.பா.ஆதித்தனார். சிறுவயதில் தினத்தந்தி படித்ததால் தான் தங்குதடையின்றி தமிழை படிக்க எனக்கு உதவியாக உள்ளது. அதற்காக வழி வகுத்தவர் ஆதித்தனார். சிந்துபாத், கன்னித்தீவு தொடர் எல்லாம் இன்னும் என்னால் மறக்க முடியாது. தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், பேரவை தலைவராகவும் இருந்தவர் சி.பா.ஆதித்தனார். ஆண்டுக்கு ஒருமுறை செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூடும் அந்த வகையில் தான் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது. வேறு எதற்காகவும் செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை. ஆட்சி ஒருவரிடமும், கட்சி ஒருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை” எனக் கூறினார்.