வீரர்களுடன் துள்ளி குதித்து கபடி.. அமைச்சரின் கலக்கல் பிரச்சாரம்!

 

வீரர்களுடன் துள்ளி குதித்து கபடி.. அமைச்சரின் கலக்கல் பிரச்சாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 2 வாரங்களில் நடக்கவிருக்கிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் அதிமுக வேட்பாளர்கள், மக்கள் காலில் கூட விழுந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வீரர்களுடன் துள்ளி குதித்து கபடி.. அமைச்சரின் கலக்கல் பிரச்சாரம்!

மக்களுடன் அமர்ந்து சாப்பிடுவது, டீ குடிப்பது, நடனமாடுவது போன்ற வழக்கமான அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கபடி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பும் போது ராபின்சன் மைதானத்திற்கு சென்ற அவர், அங்கு வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடினார். வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உள்ளே சென்ற ஜெயக்குமார், திடீரென கபடி விளையாடியது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த கணம், மைதானமே கரவோசையில் அதிர்ந்துள்ளது.