ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

 

ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர தமிழக அரசின் அனுமதியை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழுகின்றன. பிரச்சாரத்தின் போது ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதற்கு முதல்வரும் அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அறிக்கை வாயிலாக அதிமுக அரசின் மீது தொடர்ந்து புகார்களை முன்வைக்கும் மு.க ஸ்டாலினுக்கு ‘அறிக்கை நாயகன்’ என்று முதல்வர் புனைப் பெயர் சூட்டினார். அதை ஏற்றுக் கொண்ட மு.க ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ‘ஊழல் நாயகன்’ என்று கூறினார். இவ்வாறாக திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நீடிக்கிறது.

ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்குத் தொடர ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்புக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.30 கோடி முறைகேடு செய்ததாக ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு அவதூறு என அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடரவிருக்கிறார்.