பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுவதா?அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

 

பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுவதா?அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுவதா?அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
‘கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆளாளுக்கு கருத்து கூறுகிறார்கள் அதற்கெல்லாம் பதில் கூற முடியாது. கூட்டணியை மதிக்கும் கட்சி அதிமுக. திமுக போல் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டணி கட்சியை அவன் இவன் என்று பேசினார் . அப்படி எல்லாம் எங்களால் பதில் கூற முடியாது’ என்றார் .

பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுவதா?அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

தொடர்ந்து பேசிய அவர், ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் திமுக. கொள்ளையடித்து தமிழகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளியது தான் திமுகவின் சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.