“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

 

“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

தேர்தல் நெருங்கி விட்டதால் ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை குறித்து விமர்சித்துள்ளார். அதில், “கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஸ்டாலினுக்கு சொந்த புத்தி கிடையாது. யாரோ சொல்வதை கேட்டுவிட்டு மசாலா படம் போல தர பார்க்கிறார். திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது. திமுகவும், ஸ்டாலினும் யார் என்பதை மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நிம்மதியாக தொழில் நடத்த முடியாது. பஜ்ஜி கடை, சுண்டல் கடை, பார்லர் என எல்லா கடைகளிலும் தொந்தரவு செய்வார்கள். யாரும் நிலம் வாங்க முடியாது. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். மக்களுக்கு தேவையேநிம்மதி தானே. அதிமுகவின் பிரமாண்டமான அவதாரத்துக்கு முன்பு திமுகவின் திட்டம் எடுபடாது ” என்றார்.

“திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் வரும் 29-ம் தேதி முதல் புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.