‘பெண் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலினுக்கு தைரியமில்லை’ – அமைச்சர் விமர்சனம்!

 

‘பெண் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலினுக்கு தைரியமில்லை’ – அமைச்சர் விமர்சனம்!

‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று நடத்திய கிராம சபைக்கூட்டத்தில், அதிமுக அமைச்சர் வேலுமணி குறித்து விமர்சித்தார். அப்போது, அக்கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஸ்டாலினை எதிர்த்து கேள்விக் கேட்டார். அந்த பெண்ணை அமரும் படி ஸ்டாலின் கூறினார். அதற்கு அந்த பெண், ஸ்டாலினை பதில் கூறச் சொல்லி அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது .

‘பெண் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலினுக்கு தைரியமில்லை’ – அமைச்சர் விமர்சனம்!

பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்த காவலர்கள் அழைத்துச் சென்ற நிலையில், அந்த பெண் அமைச்சர் வேலுமணியை தொடர்பு கொண்டு பேசினார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த பெண் அங்கிருந்து சென்றவுடன், “அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் தான் அவர். இது போன்று நடக்கும் என்று எனக்கு தெரியும்” என்று மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டினார். இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் வேலுமணி, திமுக கூட்டத்தில் சலசலப்ப்பை ஏற்படுத்திய அந்த பெண் விசிகவை சேர்ந்தவர் என்று கூறினார்.

‘பெண் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலினுக்கு தைரியமில்லை’ – அமைச்சர் விமர்சனம்!

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பெண் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க தைரியமில்லாமல் தேவையில்லாததை ஸ்டாலின் கூறுகிறார். எந்த ஒரு சலசலப்புக்கு அதிமுக அஞ்சாது மீண்டும். அதிமுக ஆட்சிதான் மலரும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.