“சாதி மதம் இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

 

“சாதி மதம் இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

சமீபத்தில் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றினர். இதில் பாரத் சேனா அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது. இதேபோல் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்த சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது.

“சாதி மதம் இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

இவ்வாறு மறைந்த தலைவர்களை அவமதிப்பு செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருக்கும் அண்ணா சிலை மீது பழைய பல்பு, மாலை, காவிக் கொடி அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“சாதி மதம் இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது” : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “சாதி மதம் இனத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மண்; அமைதியான மண். தமிழகத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அரசியல் தான் எடுபடும். குறுகிய மனப்பான்மையுடன் யார் அரசியல் செய்தாலும் அதற்கு தமிழக மக்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.