கொரோனாவின் கோரதாண்டவம்… அமைச்சர் மரணம்!

 

கொரோனாவின் கோரதாண்டவம்… அமைச்சர் மரணம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று ஒரே நாளில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயருகிறது. பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் துடிதுடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவின் கோரதாண்டவம்… அமைச்சர் மரணம்!

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஹனுமன் மிஷ்ரா உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுமன் மிஷ்ராவுக்கு அண்மையில் கொரோனா உறுதியானதால் அவர் சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் டெக்லூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவுசாஹேப், பீகார் மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.