அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை!

 

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை!

வேளாண்துறை அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது 90% நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்: அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை!

இதனைத் தொடர்ந்து இன்று காலை, அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அவர்கள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதாக தெரிகிறது.