அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி! கவலைகிடம் என தகவல்
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சேலம் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவருக்கு 90% நுரையீரல் பாதிப்பிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. துரைக்கண்ணு உடல் நிலை குறித்து முதல்வர் நேரில் நலம் விசாரித்தார்.