அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

 

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

தமிழக வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து தற்போது திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா பேரிடர் காலம் என்பதால் முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சர் உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.