“மீண்டும் ஆட்சியை பிடிக்கும் தகுதி திமுகவுக்கு இல்லை” – அமைச்சர் விமர்சனம்!

 

“மீண்டும் ஆட்சியை பிடிக்கும் தகுதி திமுகவுக்கு இல்லை” – அமைச்சர் விமர்சனம்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவை கூட காண திமுகவிற்கு தகுதியில்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர், ‘பிற மாநிலங்களை காட்டிலும் கொரோனா கட்டுப்படுத்துதலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் தமிழகம் தான். அனைத்து பகுதிகளிலும் சுகாதார அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது’ என தெரிவித்தார்.

“மீண்டும் ஆட்சியை பிடிக்கும் தகுதி திமுகவுக்கு இல்லை” – அமைச்சர் விமர்சனம்!

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்காக அரசு கொண்டு வந்திருக்கும் அம்மா மினி கிளினிக் திட்டத்தின் மூலமாக கிராமத்தில் வசிப்பவர்கள் சிகிச்சைக்காக நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை மாறும் என்றும் விழுப்புரத்தில் மட்டும் 21 கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் மினி கிளினிக் குறித்த திமுகவின் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், திமுகவை மக்கள் விரட்டி அடித்து 10 ஆண்டுகள் ஆகி விட்டது. மீண்டும் ஆட்சிக்கு வருவதை கனவு காண கூட அவர்களுக்கு அருகதை இல்லை என தெரிவித்தார்.